Sunday, 18 February 2018

வானத்தில் ஏவப்பட்ட டெஸ்லா கார் பூமி மீது மோத போகிறது..

வானத்தில் சுற்றிக் கொண்டு இருக்கும் டெஸ்லா கார் பூமியில் மோத வாய்ப்பு இருக்கிறது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதற்கான ஆதாரங்களை மூன்று விஞ்ஞானிகள் சமர்பித்து உள்ளனர். சில நாட்கள் முன்பு உலகின் பெரிய ராக்கெடான ''ஃபல்கான் ஹெவி'' வானத்தில் ஏவப்பட்டு இருக்கிறது. ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் இந்த சாதனையை செய்து இருக்கிறார். இதனுடன் சிவப்பு நிற டெஸ்லா கார் ஒன்றும் அனுப்பப்பட்டது. தற்போது இந்த கார் செவ்வாய் கிரகத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.

டெஸ்லா கார் டெஸ்லா நிறுவனத்திற்குச் சொந்தமான 'செர்ரி ரெட் டெஸ்லா' கார் ஆகும் இது. அந்த நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் தன்னுடைய கலெக்சனில் வைத்து இருந்த கார். வானத்திற்கு சென்ற ஆரம்பத்தில் பேட்டரியில் இயங்கிக் கொண்டு இருந்தது. 4 மணி நேரத்தில் அதன் பேட்டரி தீர்ந்தது.


செவ்வாயை நோக்கி இந்த கார் அப்படியே பயணித்து செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதைக்கு செல்லும். செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையை அடைய 6 மாதம் ஆகும். தற்போது 300 கிமீ வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. பூமி பூமி இந்த கார் 2091ல் மீண்டும் பூமிக்கு அருகில் வரும். அப்போது பூமி மீது கண்டிப்பாக மோதும் என்று கூறப்பட்டு உள்ளது. ஹன்னோ ரெயின், டேனியல் தாமயோ, டேவிட் வொக்ரோஹ்லிக்கு ஆகியோர் இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார்கள். இதற்கான ஆராய்ச்சி கட்டுரையை நாசாவில் சமர்ப்பிக்க இருக்கிறார்கள்.

வாய்ப்பு குறைவு இதற்கான வாய்ப்பு குறைவு என்றும் கூறியுள்ளனர். இது பூமி மீது மோத 6 சதவிகித வாய்ப்பு உள்ளது. வெள்ளி மீது 2 சதவிகித வாய்ப்பு இருக்கிறது. இது அதிகபட்சம் 3 வருடங்களுக்குள் மொத்தமாக நொறுங்கி உடையவும் வாய்ப்பு உள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/international/space-x-s-tesla-car-may-crash-into-earth-say-scientists/articlecontent-pf295409-311758.html

No comments:

Post a Comment


அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு.