Thursday, 15 November 2012

பணியை எந்த அளவுக்கு நேசிக்க வேண்டும் எனத் தெரியாமல் பணிக்கு
அடிமையாகிவிடுபவர்கள் உண்டு. பணியும்  செயல்பாடுமே போதைகளாகிவிடுகின்றன. எந்த போதையும் ஆபத்தானது; அது மதுவாக இருந்தாலும் சரி, பதவியாக இருந்தாலும் சரி. ஏனென்றால்,  அது புலன்களை மந்தமாக்கிவிடும் சக்தி வாய்ந்தது.

நாற்காலியே முக்கியம் என்றும், மேலதிகாரியின் பாராட்டுப் பத்திரமே பதக்கமென்றும், பரிசு பெறும் புகைப்படங்களே ஆதர்சம் என்றும் வாழும்
பலர் ஒய்வு பெறும்போது தங்களுக்குத்  தாங்களே பச்சாதாபப்பட்டுக் கொள்வதைப் பார்க்க முடியும். ' இதற்காகவா வாழ்க்கையின் எத்தனையோ இனிய நிகழ்வுகளை நாம் இழந்தோம்' என அவர்கள் அங்கலாய்த்துக் கொள்வதைக்  காணலாம். சாதனைகள் செய்யும் நோக்கில் அப்பாவின் பிறந்த நாளை, பெற்றோர்களின் திருமண நாளை, குழந்தைகளின் தேர்வுத்  தேதியை
மறந்த இவர்கள், தங்கள் இல்லத்திலேயே கருணை இல்ல உறுப்பினராக காலம் தள்ளுபவர்கள்.

வெ. இறையன்பு அவர்களின் "எப்போதும் இன்புற்றிருக்க ..." நூலிலிருந்து ....

Friday, 29 June 2012

உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்!

Don't Miss Potatoes in your Diet - Food Habits and Nutrition Guide in Tamil
                  










 
எல்லா உணவு வகைகளில் உள்ளதைவிட இதில் காரப்பொருள் அதிக அளவுடனும், உறுதியான பொருளாகவும் இருக்கிறது. இதுதான் நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது.
யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றிவிடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.
ஊட்டச்சத்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த உருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால் போதும். அவித்த உருளைக்கிழங்குகளை தோலுடன் மசித்துத் தினமும் ஒருவேளை வீதம் ஒரு வாரம் முதல் பத்து நாள்கள் வரை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பச்சையான உருளைக்கிழங்கு ரசம் தரும் நன்மைகள்!
வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், ஆகியன உள்ளவர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளாகப் பார்த்து எடுத்து, அவற்றை பச்சையாக மிக்ஸி மூலம் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்த வேண்டும்.
இதுபோல், மூன்று வேளையும் உணவு நேரத்துக்கு முன்பு அருந்த வேண்டும். உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது. இதே உருளைக்கிழங்குச்சாற்றை உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகுதிகளில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும், வாத நோய்களுக்கும் வெளிப்பூச்சாகத் தேய்க்க உடல் நலமுறும்.
இந்தச்சாற்றை அடுப்பில் வைத்து மூன்றில் ஒரு பங்காக வற்றச் செய்து அதில் கிளிசரின் சேர்த்து, பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவேண்டும். வீக்கம், வலி ஆகியன உள்ள இடங்களில் இரண்டு அல்லது மூன்ற மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தைலத்தை அழுத்தித் தேய்த்தால் ஒரே நாளில் வீக்கம் குறையும் வலியும் நீங்கும்.
வாத நோய் குணமாகும்!
இரு பச்சையான உருளைக்கிழங்குகளைத் தோலுடன் மிக்ஸியில் அரைத்துச் சிறிது தண்ணீர்விட்டு, இரு தேக்கரண்டி வீதம், உணவு சாப்பிடுவதற்கு முன்பு, அருந்த வேண்டும். இப்படி அருந்திய சாறு உடலில் வாதநோயைத் தோற்றுவிக்கும் அமிலத்தை வெளியேற்றிவிடுகிறது. தொடர்ந்து உட்கொண்டால் வாதநோய் முற்றிலும் குணமாகும் சாத்தியம் அதிகம் உண்டு.
அவித்த உருளைக்கிழங்குகளின் தோல்களைச் சேகரித்து, சுத்தம் செய்து, ஒரு டம்ளர் தண்ணீரில் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். பிறகு, இந்தக் கஷாயத்தை அருந்தினாலும் கீல் வாதம் குணமாகும். இந்த முறையில் தினமும் மும்முறை தயாரித்து அருந்த வேண்டும்.
நீண்ட நாள் மலச்சிக்கல் தீர...
கெட்டுப்போன இரத்தம், குடல்பாதையின் நச்சுத்தன்மை உள்ள அமிலம், சிறுநீரில் உள்ள புளிப்பு அமிலம் தொடர்பாக ஏற்படும் நோய்கள் உள்ளோர், நீண்ட நாள் மலச்சிக்ககால் அவதிப்படுவோர் ஆகியோர் உருளைக்கிழங்கு வைத்தியத்தை குறைந்தது ஆறுமாதங்கள் பின்பற்றினால் மேற்கண்ட நோய்களிலிருந்து பூரண நலம் பெறலாம்.
தினசரி உணவில் உருளைக்கிழங்கை அவித்தோ, வேகவைத்தோ, பொரித்தோ, சூப்வைத்தோ சேர்த்துக்கொள்வதுதான் உருளைக் கிழங்கு வைத்தியம். சோறு, சப்பாத்தி போன்றவற்றைக் குறைத்துக்கொண்டு உருளைக்கிழங்குடன் கீரைவகைகளை, குறிப்பாக லெட்டூஸ், பசலைக்கீரை, தக்காளி, செலரி, வெள்ளரிக்காய், பிட்ரூட் கிழங்கு, டர்னிப் கிழங்கு போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.
இதன்மூலம் தோலில் உள்ள அழுக்குகளும், சுருக்கங்களும் நீங்கிவிடும். மலச்சிக்கலும் அகன்று இரத்தம் சுத்தம் செய்யப்பட்டுப் புத்தம் புது மனிதனாக ஒவ்வொரு நாளையும் சந்திக்கலாம்.
முகத்திற்கு பீளிச்சிங் வேண்டாம்!
வயதால் முகத்திலும், உடலிலும் சுருக்கம் உள்ளவர்கள் பச்சையாக உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு இரவில் தூங்கச் செல்ல வேண்டும். சுருக்கங்களை போக்கிச் சலவை செய்த துணிபோல இளமைத் துடிப்புள்ள முகத்தையும், சுருக்கமில்லாத தோலையும் உடலுக்குத் தந்துவிடுகிறது. இந்த வைத்தியம், அமெரிக்காவில் இந்த முறையில் இயற்கையாக முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கங்களை நீக்கிக்கொள்கின்றனர்.
உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்!
ஆட்டுக்கறியுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சமைக்கக் காரணம் என்ன? உருளைக்கிழங்கு எளிதில் ஜீரணமாகி உணவுப்பாதையில் எந்தவிதமான சிரமும் இன்றி ஆட்டுக்கறி செல்ல பயன்படுகிறது. எனவே ஆட்டுக்கறி செரிமானம் ஆக உருளைக்கிழங்கு பயன்படுகிறது. உருளைக்கிழங்கை யார் சாப்பிடக் கூடாது? வி.டி. நோயினால் துன்பப்படுபவர்களும், கொழுத்த சரீரம் உள்ளவர்களும் உருளைக் கிழங்கைச் சாப்பிடாமல் இருந்தால் நலம்.

சிற்றின்ப உணர்ச்சியைத் தூண்டுவது உருளைக்கிழங்கு!
எனவே, இது வி.டி. நோய்க்காரர்களுக்கு எரிச்சலைக்கொடுக்கும். உருளைக்கிழங்கு மெலிந்தவர்களை சதைப்பிடிப்புடன் உருவாக்கும்.
குண்டானவர்களை மேலும் குண்டாக்கிவிடும்!
எனவே, உடல் கொழுத்த மனிதர்கள் எண்ணெயில் பொரித்த உருளைக்கிழங்கு வறுவலை முற்றிலும் தவிர்த்து, மாதம் ஒரு முறை அவித்த உருளைக்கிழங்கை அளவுடன் சாப்பிட வேண்டும்.
(ஆசைக்காக) வி.டி. நோய்க்காரர்கள, வியாதி குணமான பிறகு உருளைக் கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மற்றவர்கள் ஆரோக்கிய உணவாகத் திகழும் உருளைக் கிழங்கை அடிக்கடி சாப்பிட்டு உடல் நலத்தைப் புதுப்பிக்க இன்றே முடிவு செய்யுங்கள்.

Wednesday, 23 May 2012

உலகம் அழிவை நோக்கிய பாதையில் விரைவில் ... !!!

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் பூமியின் சுற்றுச்சூழல் பாதிப்புக்குறித்த காணொளியை வெளியிட்டு வைத்து உரையாற்றும் போது.





மனிதன் தனது சிந்தனையால் இயற்கையைக் கட்டுப்படுத்தினான் என்று பெருமிதப்பட்ட காலம் போய் மனிதன் தனது சிந்தனையால் அற்புதமான இயற்கையைச் சிதைத்து அழிவைத் தேடிக்கொண்டான் என்ற நிலை விரைந்து வருகிறதோ என்ற சந்தேகத்தை பூமி வெப்பமடைதல் என்ற மிகப்பெரிய சவால் ஏற்படுத்தி உள்ளது.



கிறீன்லாந்துப் பகுதியில் பனி விரைந்து உருகி வருகிறதை காட்டுகிறது..



மனிதனின் செயற்பாட்டால் வெளிவிடப்படும் பச்சைவீட்டு வாயுக்களின் (CO2, methane மற்றும் nitrogen oxides ) அளவும் அதிகரித்து வருவதுடன் சூழல் வெப்பநிலை அதிகரிப்பால் பூமியின் துருவப்பகுதிகளில் பனிக்கட்டிகளாக தேக்கப்பட்டிருக்கும் நீர் தற்போது திரவமாகிக் கடலுடன் கலப்பதால் கடல் மட்டமும் எதிர்பார்த்த அளவை விட வேகமாக அதிகரித்து வருகின்றது. முன்னர் பிரேரிக்கப்பட்ட அளவிலும் 59% அதிகமான அளவில் கடலின் நீர்மட்டம் அதிகரிக்கும் வகையில் பனிப்பாறைகள் உருகி வருகின்றன. குறிப்பாக கிறீன்லாந்து மற்றும் ஆட்டிக் பகுதிகளில் அதிகளவு பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்ற நிலையிலும்...உலகின் தனிமைப்படுத்தப்பட்ட பனிப்பாறைப் பகுதியான அந்தாட்டிக்கிலும் இதே நிலை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால்..எதிர்பார்க்கப்பட்ட அளவை விட வேகமாக கடல்மட்டம் அதிகரித்து வருகின்றது.




இது பூமியின் கரையோர தாழ்நில தரைத்தோற்றம் கடலுக்குள் உள்வாங்கப்படும் நிலையை ஏற்படுத்தி இருப்பதோடு பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்ந்து நிலவி வரும் நிலையில் இயற்கை அனர்த்தங்களின் பாதிப்புக்களும் மனிதர்களை மிக நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன.





இதையெல்லாம் கண்ணுற்றுவிட்டு அமெரிக்க அரசு பூமியில் சூழல் மாற்றம் குறித்து மக்களை அறிவுறுத்தவும் விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொள்ளத் தூண்டவும் விசேட நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாகத் தெரிகிறது. அமெரிக்காவே உலகில் அதிகளவு பச்சைவீட்டு வாயுக்களை வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்..!






குறளமுது

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு,
அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன்
பயனே என்று கூறலாம்

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு.